Connect with us

Raj News Tamil

திடீர் ஆய்வு: பள்ளிக்கு வராத ஆசிரியர்கள்; பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்!

தமிழகம்

திடீர் ஆய்வு: பள்ளிக்கு வராத ஆசிரியர்கள்; பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்!

காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால், மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 26 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர் அரசு நிகழ்ச்சி ஒன்றிற்கு அந்த வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது பள்ளி வகுப்பில் மாணவ, மாணவிகள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் காலை 9.15 மணி வரை பள்ளிக்கு வராத பள்ளியின் ஆசிரியர்கள் மாலதி, அங்கையர் கனி இருவரையும் இடமாற்றம் செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.

More in தமிழகம்

To Top