Connect with us

Raj News Tamil

சொத்துத் தகராறில் தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது

தமிழகம்

சொத்துத் தகராறில் தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தை வேலு (65). இவருக்கு சங்கவி என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு குழந்தைவேலுவுக்கும் அவரது மகனிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி குழந்தைவேலை அவரது மகன் சக்திவேல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து குழந்தைவேலு திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு வழக்கம் போல் தூங்கச் சென்றுள்ளார். அடுத்தநாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது அறையில் சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

குழந்தை வேலுவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு சக்திவேல் மீது தந்தையை தாக்கியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளைச் சிறைக்கு அடைத்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top