Connect with us

Raj News Tamil

பெற்ற தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன்..!!

இந்தியா

பெற்ற தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன்..!!

ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தை சேர்ந்தவர் சாரதா (வயது 70). கணவரை இழந்த சாரதாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். சாரதாவின் இளைய மகன் சஸ்துருகன் தனது மனைவியுடன் அதேகிராமத்தில் தனியே வசித்து வந்தார். சஸ்துருகனுக்கு கிராமத்தில் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில், சாரதா நேற்று தனது இளைய மகன் சஸ்துருகனின் தோட்டத்தில் இருந்து சமைக்க காலிபிளவர் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த மனைவியையும் சஸ்துருகன் தாக்கியுள்ளார்.

மகன் தாக்கியதில் படுகாயமடைந்த சாரதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in இந்தியா

To Top