எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மூன்று விசைப்படகுகளுடன் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக மீன்பிடிக்க துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று விசைப்படகுகளை அதிலிருந்து 22 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட விசைப்படகுகளில் இரண்டு ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தது எனவும், ஒன்று நாகப்பட்டினத்தை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.