Connect with us

Raj News Tamil

சென்னையில் பேருந்து மீது கல் வீச்சு..!

தமிழகம்

சென்னையில் பேருந்து மீது கல் வீச்சு..!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து, மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நின்றவர்கள் சிலர் பேருந்து மீது கற்களை வீசியுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் பேருந்து மீது கற்களை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சென்னை மதுரவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More in தமிழகம்

To Top