Connect with us

Raj News Tamil

7 மாத குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்..!

இந்தியா

7 மாத குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்..!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அயோத்தி நகர் பகுதியில், 7 மாத ஆண் குழந்தையை தெருநாய்கள் கடித்து இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று குழந்தையின் தாய் குழந்தையை உறங்க வைத்துவிட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது தெருநாய்கள் குழந்தையை கடித்து இழுத்து சென்றுள்ளது. நாய்கள் கடித்ததில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in இந்தியா

To Top