தமிழகம்
500க்கு 495 மார்க்..அசத்திய நெல்லை மாணவன்..குவியும் பாராட்டு
திருநெல்வேலியை சேர்ந்த அர்ஜுன் பிரபாகர் என்ற மாணவன் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அர்ஜுன் பிரபாகர் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே முதல் மாணவன் ஆக வந்து சாதனைப் படைத்துள்ளார்.
தமிழில் 97, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 99 மற்றும் சமூக அறிவியலில் 100 என மொத்தம் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவனின் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தாய் செல்வி கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை கவனித்து வருகிறார். தந்தை இல்லாமல் ஏழ்மையான சூழ்நிலையில் படித்து இந்த அளவில் மதிப்பெண் பெற்ற மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
You must be logged in to post a comment Login