சினிமா
மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது சுப்ரமணியபுரம்..!!
சசி குமார் இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். இதில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது மீண்டும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் ரீ-ரிலீசாக உள்ளது. இதனை இயக்குனர் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
#Subramaniapuram re-releasing in theatres on 4th August 2023#15YearsOfSubramaniapuram pic.twitter.com/ozc76XhUou
— M.Sasikumar (@SasikumarDir) July 31, 2023