தமிழகம்
சுரங்கப்பாதையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து
சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்து சபரீசன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய சகோதரர் கார்த்திகேயன் என்பவரை சென்னை விமான நிலையத்திற்கு அவரது காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஆலந்தூர் சுரங்கப்பாதையில் கார் சென்று கொண்டு இருந்த போது திடீர் கார் பழுதாகி நின்றது. உடனே முத்து சபரீசன் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது, காரின் முன் பக்கத்தில் இருந்து கரும் புகை கிளம்பியது. அடுத்த சில வினாடிகலில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தண்ணீரை ஊற்றி அனைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.