அரசு ஓட்டுநருக்கு திடீர் உடல்நல குறைவு: பேருந்து கவிழ்ந்து விபத்து!

ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்தை நோக்கி (TN 63 N 1809) என்ற எண் கொண்ட அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அந்தப் பேருந்தை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் (50) என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக பூமிநாதன் (58) என்பவர் பணியில் இருந்தார். 40 பயணிகளுடன் ராமேஸ்வரத்துக்கு பேருந்து சென்று கொண்டிருந்து.

அப்பொழுது சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மாரநாடு பாலம் அருகே சென்றபோது ஓட்டுனர் சண்முகநாதனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையின் ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருப்புவன காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News