தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் (ஜூலை 15) நேற்று உத்தரவிட்டது. இதன்படி வீடுகளுக்கு குறைந்தபட்சம் ஒரு யூனிட்டுக்கு 20 காசு முதல் 55 காசுகள் வரை உயர்கிறது. வணிகப் பயன்பாடு, தொழிற்சாலைகள், விசைத்தறி உள்ளிட்ட அனைத்து வகை பயன்பாட்டிற்குமான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 -ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வந்துள்ளது.
0-400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்வு.
401-500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்வு.
501-600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்வு.
601-800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20ல் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்வு.
801-1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்வு.
1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்வு.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்வு.