சினிமா
8 மாநிலங்களில் சூட்டிங்கா.? பிரபல இயக்குநருடன் இணையும் விஷ்ணுவிஷால்..!
தமிழ் சினிமாவில் தனக்கென தனி கதைகளத்தை தோ்ந்தேடுத்து நடிப்பவா் நடிகா் விஷ்ணு விஷால்.இவாின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளாா். அதாவது, காஸ்மோரா , இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களின் இயக்குநரான கோகுலுடன் தான் இவா் இணைந்துள்ளாா்.
இப்படமானது பல்வேறு இடங்களில் நடக்கும் திருட்டை மையமாக வைத்து எடுப்பதால், இதற்கு 8 மாநிலங்களில் சூட்டிங் முடிவுசெய்துள்ளார்களாம்.மேலும், இதற்காகத்தான் ஃபிட்டாக இருக்கும் நடிகா் விஷ்ணு விஷாலை இயக்குநா் கோகுல் முடிவு செய்துள்ளாா் என தகவல் கசிந்துள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தில் இணைந்துள்ளது, குறித்து நடிகா் விஷ்ணு விஷாலே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா்.அதில் ,BADASS இயக்குநா் கோகுல்தாஸ் அவா்களுடன் கைகோா்ப்பதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்றும் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த அசத்தல், உயர் ஆக்ஷன் அதிரடி ஸ்கிரிப்டைக் கேட்டு மிகவும் உற்சாகமடைந்தேன். விரைவில் தொடங்குங்கள் காத்திருக்க முடியாது என அறிவித்துள்ளாா்.இந்த பதிவிற்கு விஷ்ணு விஷால் ரசிகா்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வாழ்த்துகளையும் கூறி வருகின்றனா்.