Connect with us

Raj News Tamil

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அரசியல்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், பொன்முடிக்கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விடுவிக்கப்படவில்லை என்பதால் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில்தான், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பொன்முடிக்கு எம்எல்ஏ பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அமைச்சரவை பதவி வழங்க அரசு பரிந்துரைத்தும் ஆளுநர் அதை செயல்படுத்த மறுக்கிறார்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவசர வழக்காக விசாரிக்கை வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டநிலையில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top