Connect with us

Raj News Tamil

உச்சநீதிமன்றத்திற்கு புதியதாக மூன்று நீதிபதிகள் நியமனம்

இந்தியா

உச்சநீதிமன்றத்திற்கு புதியதாக மூன்று நீதிபதிகள் நியமனம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மூன்று பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி மூன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது.

அதன் படி டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மற்றும் குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகிய முவரும் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிறகு உச்ச நீதிமன்றம் 34 நீதிபதிகளைக் கொண்ட முழு பலத்துடன் செயல்படும்.

More in இந்தியா

To Top