சினிமா
Drop ஆனது சூர்யா-பாலா படம்?
நந்தா, பிதாமகன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய சூர்யா-பாலா கூட்டணி, தற்போது வணங்கான் என்ற திரைப்படத்தின் மூலம் இணைய உள்ளது. க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்து வரும் இந்த திரைப்படத்தை, 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கண்ணியாகுமரி மாவட்டத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த வந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், நீண்ட நாட்களாகியும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இதன்காரணமாக, இந்த திரைப்படம் Drop ஆகிவிட்டதாகவும், வேறொரு கதையில், சூர்யாவும், பாலாவும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த தகவல் அனைத்தும் பொய் என்று பிரபல நடிகர் ஷிஹான் ஹூசைனி தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், தான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login