Connect with us

Raj News Tamil

உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர்.. திடீரென நடந்த கொடூரம்.. 3-வது மாடியில் குதித்த இளைஞர்..

இந்தியா

உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர்.. திடீரென நடந்த கொடூரம்.. 3-வது மாடியில் குதித்த இளைஞர்..

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள யூசுப்குட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் முகமது ரிஸ்வான். உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில், கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், பன்ஜாரா ஹில்ஸ் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உணவு டெலிவரி செய்வதற்காக, கடந்த 11-ஆம் தேதி அன்று சென்றுள்ளார். 3-வது மாடிக்கு சென்ற அவர், அங்கு கஸ்டமரின் வீட்டுக்கதவை தட்டியுள்ளார். ஆனால், கஸ்டமருக்கு பதிலாக, அந்த வீட்டில் வளர்த்து வரும் நாய், ரிஸ்வானை கடிக்க முயன்றுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து ஓடியுள்ளார். இருப்பினும், அந்த நாய் தொடர்ந்து துரத்தியதால், அதனிடம் இருந்து தப்பிக்க, 3-வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர், கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரிஸ்வானின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அந்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top