Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

நாய் துரத்தியதால் 3-வது மாடியில் இருந்து குதித்த ஸ்விக்கி ஊழியர்

Trending

நாய் துரத்தியதால் 3-வது மாடியில் இருந்து குதித்த ஸ்விக்கி ஊழியர்

ஹைதராபாத் யூசப்கூடா ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ரிஜ்வான் (23). ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் கடந்த புதன்கிழமை இரவு, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உணவு விநியோகிக்க சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டில் இருந்த நாய், ரிஜ்வானை கடிக்க ஓடி வந்தது. இதனால் பயத்தில் ஓடிய ரிஜ்வான் 3-வது மாடியிலிருந்து கீழே குதித்தார்.

இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே உணவு ஆர்டர் செய்த சோபனாவின் அலட்சியமே இதற்கு காரணம் என்று ரிஜ்வானின் சகோதரர் முகமது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top