Connect with us

Raj News Tamil

பயங்கர நிலச்சரிவு: உயிருடன் புதைந்த 2,000 பேர்!

உலகம்

பயங்கர நிலச்சரிவு: உயிருடன் புதைந்த 2,000 பேர்!

பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 670 பேர் வரை உயிரிழந்துள்ளது என முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

மேலும், 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்தநாடு பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் 6 முதல் 8 மீட்டர் (20 முதல் 26 அடி) ஆழ இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இனி உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று மீட்பு படையினர் கூறியுள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top