உலகம்
பயங்கர நிலச்சரிவு: உயிருடன் புதைந்த 2,000 பேர்!
பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 670 பேர் வரை உயிரிழந்துள்ளது என முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
மேலும், 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்தநாடு பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் 6 முதல் 8 மீட்டர் (20 முதல் 26 அடி) ஆழ இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இனி உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று மீட்பு படையினர் கூறியுள்ளனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)