ராமேஸ்வரம் கோவிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் – போலீசார் கண்காணிப்பு

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நூற்றுக்கணக்கானோர் நடமாடுவதாகவும் கோவிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த புகாரை அடுத்து கோவிலின் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு போலீசார் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட கோவிலின் மேல்புற தட்டு ஓடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உலா வருவதாக கூறப்படுகிறது. இதனை காவல்துறையும் கோவில் நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News