Connect with us

Raj News Tamil

வெங்கட் பிரபு மீது நம்பிக்கை இழந்த விஜய்? என்ன ஆச்சு? காரணம் இதுதானா?

சினிமா

வெங்கட் பிரபு மீது நம்பிக்கை இழந்த விஜய்? என்ன ஆச்சு? காரணம் இதுதானா?

தளபதி விஜய், தற்போது லியோ படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், தளபதி விஜய் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், தளபதி விஜய், விஜயின் மேனேஜர் ஜெகதீஷ், ஏ.ஜி.எஸ் நிறுவனம் ஆகிய 3 பேரும், வெங்கட் பிரபு மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்று தகவல் பரவி வருகிறது. அதாவது, தனது தற்போதைய படங்கள் வெளியான பிறகு தான், அடுத்த படத்திற்கான அப்டேட்கள் வர வேண்டும் என்பதில், விஜய் உறுதியாக உள்ளார்.

இதனால் தான், வாரிசு படம் வெளியான பிறகே, லியோ படத்தின் அப்டேட்களை, லோகேஷ் கனகராஜ் வரிசையாக வெளியிட்டார். இப்படி செய்தால் தான், தற்போது எடுக்கப்பட்டு வரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் இருக்கும் என்று விஜய் கணக்கு போட்டு வைத்திருக்கிறாராம்.

ஆனால், அந்த கணக்கை வெங்கட் பிரபு உடைப்பதாக, சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது, செல்லும் அனைத்து இடங்களிலும், தளபதி 68 படம் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று பேசி வருகிறாராம். இதனால், படத்தின் மீதான சஸ்பென்ஸ் குறையும் என்று விஜய் நினைக்கிறாராம்.

எனவே, லோகேஷ் கனகராஜ் மீது வைத்திருந்த நம்பிக்கை, வெங்கட் பிரபு மீது விஜய் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை புரிந்துக் கொண்டு, இனிமேல் வெங்கட் பிரபு நடந்துக் கொள்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top