Connect with us

Raj News Tamil

தொடங்கியது ஆதித்யா எல்-1 கவுண்ட்டவுன்! மீண்டும் சாதனை படைக்குமா இஸ்ரோ?

இந்தியா

தொடங்கியது ஆதித்யா எல்-1 கவுண்ட்டவுன்! மீண்டும் சாதனை படைக்குமா இஸ்ரோ?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென்துருவத்திற்கு சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி சாதனை படைத்தது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், செப்டம்பர் 2-ந் தேதி (நாளை) காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.

இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும் என்று தகவல் வெளிவநதுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top