Connect with us

Raj News Tamil

நாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தரும் கட்சியுடன்தான் கூட்டணி! – பிரேமலதா விஜயகாந்த்

அரசியல்

நாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தரும் கட்சியுடன்தான் கூட்டணி! – பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தலைவர் விஜயகாந்த் வகுத்த வழியில் பயணிப்போம் என்று கூறினார். மேலும், அதிக தொகுதி தருவோருடன் கூட்டணி வைப்போம் என்றும், 14 மக்களவைத் தொகுதி, 1 மாநிலங்களவை இடம் தருவோருடன்தான் கூட்டணி வைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் போல அதிகத் தொகுதிகளைத் தரும் கட்சியுடன்தான் கூட்டணி என்றும், பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுபோல, மறைமுகமாகவோ நேரடியாகவோ எந்தக் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்றும், மாவட்டச் செயலாளர்கள் எண்ணம் என்ன என்பதை அறிந்துகொண்ட பிறகுதான் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தத் தொகுதி, வேட்பாளர் யார் என்பதெல்லாம் இனிமேல் ஆலோசனை செய்தே முடிவெடுக்கப்படும் என்றும் புதிய கட்சித் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு தேமுதிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை தரும் கட்சியுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தையே நடத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

More in அரசியல்

To Top