Connect with us

Raj News Tamil

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த படகு ! சில நொடியில் உயிா் தப்பிய மீனவா்கள்!

இந்தியா

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த படகு ! சில நொடியில் உயிா் தப்பிய மீனவா்கள்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே வங்க கடலில் மீனவர்கள் வழக்கம்போல் இன்று மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீன்பிடி படகுகளில் திடீரென தீ பற்றி எரியதொடங்கியுள்ளது .இதனால் அந்த படகில் உணவு சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

மேலும் படகு முழுவதும் பற்றி எரிய துவங்கியவுடன் தீ விபத்து குறித்து அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தனர்.விரைந்து வந்த கடலோர காவல் படையினர் தீ விபத்தில் சிக்கிய படகில் இருந்த 11 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top