Connect with us

Raj News Tamil

12 வயது சிறுவனுக்கு நோ்ந்த கொடூரம் ! 28 வயது வாலிபனின் வெறிச்செயல் !

தமிழகம்

12 வயது சிறுவனுக்கு நோ்ந்த கொடூரம் ! 28 வயது வாலிபனின் வெறிச்செயல் !

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமன் (45). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா (38). இவர்களது 2வது மகன் அரவிந்த் (12). அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த திங்கள்கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அரவிந்த், மாலை 6 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் அம்பிகா அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அரவிந்தை அதே ஊரை சேர்ந்த இளவரசன் (28) என்பவர் உடும்பு பிடிப்பதற்காக ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்து சென்றது தெரியவந்தது.

இதனால் , திருமலைராஜன் ஆற்றங்கரைக்கு சென்ற அம்பிகா, மகனை சுற்றி முற்றி தேடியுள்ளாா்.அங்கே புதரருகே மகன் சீருடை முழுதும் இரத்த கரையுடன் பிணமாக கடந்துள்ளாா்.ஆனால், மகனை அழைத்து சென்ற இளவரசன் ஏதும் நடக்காதது போல்,
தனது துணிகளை துவைத்து அங்கேயே காய வைத்துள்ளாா்.இதனை பாா்த்த அம்பிகா அலறியடித்துக்கொண்டு ஓடினா். அவரை பாா்த்த ஊா்பொதுமக்கள் விவரம் அறிந்து
போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இத்தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினா் , இளவரசனை பிடித்து விசாாித்தனா். டிப்ளமோ இன்ஜினியாிங் முடித்து இவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் , மருத்துவா் ஆலோசனையுடன் மாத்திரை உட்கொள்கிறாா் என்பது தொியவந்தது.
இவா் எதற்காக அரவிந்தை ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றாா் என்பதும் குறித்தும் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றா்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top