தமிழகம்
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!!
சேலத்தில் இருந்து திருப்பதி நோக்கி அரசு சொகுசுப் பேருந்து 15 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை அருகே இருந்த சுமார் 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.