Connect with us

Raj News Tamil

சென்னை வளர்ச்சியடைய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது: பிரதமர் மோடி!

தமிழகம்

சென்னை வளர்ச்சியடைய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது: பிரதமர் மோடி!

சென்னை போன்ற மாநகரங்கள் வளர்ச்சியடைய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி இந்த ஆண்டில் 4-வது முறையாக நேற்று தமிழகம் வந்தார்.

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாமரை மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:

ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும், தமிழக மக்களால் உற்சாகம் அடைகிறேன். திறமை, வர்த்தகம், பாரம்பரியத்தின் மையமாக சென்னை மாநகரம் திகழ்கிறது. எனக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. ஆனால், சில ஆண்டுகளாக நான் தமிழகம் வரும்போதெல்லாம், சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. பாஜகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து வலுவடைந்து வருவதுதான் இதற்கு காரணம்.

வளர்ந்த பாரதத்துடன், வளர்ந்த தமிழகமும் வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். சென்னை போன்ற மாநகரங்கள் வளர்ச்சியடைய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. சென்னையில் பல ஆயிரம் கோடி மதிப்பில் நகர்ப்புற திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உட்பட தமிழகத்தின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது.

ஆனால், மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு,சென்னைவாசிகளின் தேவைகளை, அவர்களது கனவுகளை கண்டுகொள்ளவே இல்லை. புயல் வந்தபோது, அவர்களுக்கு உதவிசெய்வதற்கு பதிலாக துயரங்களையே திமுக அரசு அதிகப்படுத்தியது. திமுகவினர் வெள்ள மேலாண்மைக்கு பதிலாக ஊடக மேலாண்மை செய்தனர். தமிழக மக்கள், தமிழகம் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.

நலத்திட்டங்களுக்கான தொகையை மத்திய அரசு நேரடியாக பயனாளிகளுக்கு அனுப்புகிறது. பல லட்சம் கோடி ரூபாய் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குக்கு சென்றடைகிறது. இந்த பணத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் திமுகவினருக்கு இருக்கும் சிக்கல். இந்த விஷயத்தில் மொத்த குடும்பமும் பயங்கர எரிச்சலில் இருக்கிறது. உங்கள் எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அளிக்கப்படும் பணத்தையாரும் பறிக்க மோடி ஒருபோதும்விடமாட்டான். நீங்கள் ஏற்கெனவேஎடுத்த பணமும் திரும்ப வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும். இது மோடி அளிக்கும் உத்தரவாதம்.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள், குடும்ப வளர்ச்சிக்கே முன்னுரிமை தருகின்றன. மோடி சொல்வது, தேசத்துக்கே முன்னுரிமை. இதனால்தான் இண்டியா கூட்டணிகட்சியினர் என்னை வசைபாடுகின்றனர். ஆதரவற்றவர்கள், ஏழைகள் எல்லோருக்கும் சொந்தமானவன் இந்த மோடி. இந்த பாரதமே என் குடும்பம். அதனால்தான் இன்று தேசம் முழுவதும், ‘‘நான் மோடியின் குடும்பத்தை சேர்ந்தவன்’’ என்று ஒரே குரலில் கூறுகிறது.

எனது உரையை முடிக்கும் முன்பாக, என் மனதை அரிக்கும் முக்கியமான கவலையை பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருவது என் மனதை வலிக்கச் செய்கிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது அபாயத்தின் அறிகுறி. நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால், தமிழக எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடி தரும் உத்தரவாதம்.

வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு உருவானால்தான், வளர்ச்சி அடைந்த பாரதம் வலுப்படும். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கியே தீருவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top