Connect with us

Raj News Tamil

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தமிழகம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் பூவலிங்கம்(54) சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து நடத்துனராக பணி புரிந்து வந்தார்.

இவர் நேற்று இரவு 10 மணிக்கு பிராட்வேயில் இருந்து கோவளம் செல்லும் 109A என்ற பேருந்தில் பணியில் இருந்தார். அப்போது பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு குறளகம் அருகே சென்றபோது நடத்துனர் பூவலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக ஓட்டுநர் ஜஸ்டின் சேவியர் பேருந்தை நேரடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பூவலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top