சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக குழந்தையின் கையை அகற்றப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
கையை அகற்றப்பட்ட குழந்தைக்கு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.