Connect with us

Raj News Tamil

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தலைமை காவலர் உயிரிழப்பு!

தமிழகம்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தலைமை காவலர் உயிரிழப்பு!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை ‘மிக்ஜம்’ புயல் வலுப்பெற்றது.

இதன் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்தது. தொடர் மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த பகுகளில் மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மீட்புப் பணி முடிந்து திரும்பிச் சென்ற கொளத்தூர் கே7 தலைமைக் காவலர் ருக்நாதன், கீழ்பாக்கம் மண்டபம் சாலைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிப் பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top