சினிமா
புஷ்பா 2 படப்பிடிப்பை நிறுத்திய இயக்குனர்..! ஏன் தெரியுமா..?
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. பான் இந்தியா படமாக உருவான இந்த படம் , சுமார் 500 கோடிக்கு மேலாக வசூலித்து சாதனை படைத்தது. தொடர்ந்து புஷ்பா 2 உருவாகும் என ஏற்கனவே அறிவித்து இருந்த படக்குழு, அதற்கான படப்பிடிப்பை சமீப காலமாக நடத்தி வந்தது.
மேலும் விரைவில் படப்பிடிப்பை முடித்து திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு இருந்தனர் . ஆனால் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்த இயக்குனர், திருப்தியாக இல்லை என்றும், ஆகவே படப்பிடிப்பை நிறுத்திவிட்டார் என்றும் தகவல் பரவியுள்ளது. இந்த தகவல் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login