Connect with us

Raj News Tamil

அடிபட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவிக்விக் ஒட்டிய டுபாக்கூர் டாக்டர்..!

இந்தியா

அடிபட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவிக்விக் ஒட்டிய டுபாக்கூர் டாக்டர்..!

கர்நாடகா மாநிலம் ரைச்சூர் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. காயம் பெரிதாக இருந்ததால் சிறுவனின் பெற்றோர் உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு தையல் போடாமல் பொருட்களுக்கு ஒட்ட பயன்படும் ஃபெவிக்விக்கை தடவியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தையலுக்கு பதிலாக ஃபெவிக்விக் பயன்படுத்திய தனியார் மருத்துவமனையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top