இந்தியா
வயிற்றில் ஒரு மீட்டர் நீளம் துணியை வைத்து தையல் போட்ட மருத்துவர்கள் – 8 மாதத்துக்கு பின் வந்த உண்மை
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் வயிற்று வலிக்கு சிகிச்சைக்கு எடுப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளார். அவருடைய கர்பப்பை சேதமடைந்துள்ளதாகவும் இதனை உடனே அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவருக்கு அறுவை செய்த போது ஒரு மீட்டர் நீளமுள்ள சர்ஜிகல் கிளாத் எனப்படும் துணியை அந்தப்பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டுவிட்டனர். அவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் நடந்து 8 மாதங்கள் ஆன நிலையில் கடந்த ஒரு மாதமாக அந்த பெண்ணுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது வயிற்றுக்குள் எதோ ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு தான் வயிற்றுக்குள் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள சர்ஜிகல் கிளாத் இருப்பது தெரியவந்தது. கிளாத்தை அவருடைய வயிற்றில் இருந்து எடுத்த டாக்டர்கள் அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவர்களின் அலட்சியம் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
You must be logged in to post a comment Login