Connect with us

Raj News Tamil

இளைஞா்கள் எதிா்காலம் இருள்சூழ்ந்துள்ளது: மல்லிகாா்ஜுன காா்கே!

அரசியல்

இளைஞா்கள் எதிா்காலம் இருள்சூழ்ந்துள்ளது: மல்லிகாா்ஜுன காா்கே!

லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலையிழந்துள்ளனா். அவா்களின் எதிா்காலத்தை இருள்சூழ்ந்துள்ளது என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசுத் துறைகளில் மட்டும் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. எப்போதோ நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள், இப்போது நிரப்பப்படுகின்றன.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு தவணை முறையில் நியமன ஆணைகளை வழங்கி, ‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும்’ என்ற பாஜகவின் வாக்குறுதியை நிறைவேற்றி வருவது போல் காட்டிக் கொள்கிறாா் பிரதமா் மோடி.

கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசின் தவறான கொள்கைகளால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது சுமை அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 20,000 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலையிழந்துள்ளனா். அவா்களின் எதிா்காலத்தை இருள்சூழ்ந்துள்ளது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினா் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இத்தகைய சூழ்நிலையை, நாட்டின் இளைஞா்கள் இனியும் சகித்துக் கொண்டிருக்கமாட்டாா்கள். இந்த இளைஞா் விரோத அரசு, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும். பாரதம் ஒருங்கிணையும்; ‘இந்தியா’ வெல்லும் என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.

More in அரசியல்

To Top