Connect with us

Raj News Tamil

14 வருடங்களுக்கு பிறகு இந்த காரியத்தை செய்யும் விஜய்!

சினிமா

14 வருடங்களுக்கு பிறகு இந்த காரியத்தை செய்யும் விஜய்!

லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் தி கோட் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் பாணியில், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங், தற்போது கேரளாவில் நடைபெற உள்ளது. விஜய்-க்கு கேரளாவிலும் அதிக ரசிகர்கள் இருப்பதால், அங்குள்ள ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நடிகர் விஜய், கடைசியாக காவலன் படத்தில் நடித்தபோது, கேரளாவிற்கு சென்றிருந்தார்.

அதாவது, கிட்டதட்ட 14 வருடங்களுக்கு முன்பு கேரளா சென்றிருந்த விஜய், அதோடு இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு தான், அங்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top