Connect with us

Raj News Tamil

குடும்ப தகராறு…மனைவியின் கை விரலை கடித்து தின்ற கணவர்..!!

இந்தியா

குடும்ப தகராறு…மனைவியின் கை விரலை கடித்து தின்ற கணவர்..!!

பெங்களூரை சேர்ந்த விஜய்குமார் (45) – புஷ்பா (40) தம்பதியினருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த புஷ்பா, 2 மகன்களை அழைத்து கொண்டு கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி விஜயக்குமார், புஷ்பா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த விஜயக்குமார், மனைவியின் இடது கை விரலை வாயால் கடித்து மென்று தின்றதாகவும் கூறப்படுகிறது.

வலியால் அலறி துடித்த புஷ்பாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top