Connect with us

Raj News Tamil

தூரத்தை குறைத்த லேண்டர் ! 23ம் தேதியில் தரையிறங்குமா?

இந்தியா

தூரத்தை குறைத்த லேண்டர் ! 23ம் தேதியில் தரையிறங்குமா?

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து நேற்று பிரிந்த லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது. நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்க உள்ளதையடுத்து , நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது. நேற்று 153163 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சுற்றுவட்டப்பாதை தற்போது 113157 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

லேண்டரில் உள்ள 4 இயந்திரங்களில் 2 இயரந்திரங்கள் இயக்கப்பட்டு லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது. லேண்டரின் அடுத்த செயல்பாடு ஆகஸ்டு 20ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டரை வரும் 23ம் தேதி நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top