இந்தியா
சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது!!!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்த தம்பதி மற்றும் அவர்களது 6 வயது குழந்தை லக்ஷிதாவுடன் வனப்பகுதி வழியாக செல்லும்போது குழந்தை லஷிதா திடீரென மாயமானார். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குழந்தையின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறைரையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் இரவு முழுவதும் குழந்தை லஷிதாவை தேடி அலைந்தனர். மேலும் மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது குழந்தை லஷிதா தனியாக நடந்து செல்லும் வீடியோ பதிவாகி இருந்தது.
நீண்ட தேடுதலுக்கு பின் நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் குழந்தையின் உடலை காவல்துறையினர் மீட்டனர். குழந்தையின் உடல் அருகே சிறுத்தையின் எச்சம் கிடந்ததால் குழந்தையை சிறுத்தை இழுத்துச்சென்றிருக்கவேண்டும் உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக 3 கூண்டுகளை திருப்பதி மலைப்பாதை அருகே அமைத்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் சிறுத்தை ஒன்று சிக்கிக்கொண்டது. பிடிபட்ட சிறுத்தையை வனப்பகுதிக்குள்ள விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பதி நடைபாதையில் 6 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .