Connect with us

Raj News Tamil

வெற்றிகரமாக நூறாவது நாள் குடிக்காமல் இருந்ததற்கு பேனர் வைத்த நபர்!

Trending

வெற்றிகரமாக நூறாவது நாள் குடிக்காமல் இருந்ததற்கு பேனர் வைத்த நபர்!

பூந்தமல்லியை சேர்ந்தவர் சிவகுமார் இவர் பூந்தமல்லி அரசு பள்ளி அருகே கற்றாழை ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்தது பூந்தமல்லி பகுதியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதில் வெற்றிகரமாக நூறாவது நாள் மது அருந்தவில்லை என்று பேனர் வைத்திருந்தார் அதற்கு கீழ் உள்ள வசனத்தில் எந்த நேரத்திலும் நிறம் மாறாத பூ நட்பு என அச்சிட்டு வைத்திருந்தார்.

பல்வேறு இடங்களில் பிறந்தநாள், காது குத்து, அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்து பார்த்திருப்போம் ஆனால் நூறாவது நாள் குடிக்காமல் இருந்ததற்கு அவரே அவரை வாழ்த்தி பேனர் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தான் நூறாவது நாள் குடிக்காமல் இருப்பதாகவும் தனக்கும் தனது நண்பருக்கும் குடியை நிறுத்துவதில் போட்டியிருந்ததாகவும் அதில் தான் வெற்றி பெற்ற நிலையில் அதனை கொண்டாடும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பேனர் வைத்திருப்பதாகவும் 100 நாட்கள் குடிக்காமல் இருந்ததால் தனக்கு இருந்த ரூ.80 ஆயிரம் கடனை அடைத்து விட்டதாகவும் உடல் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதிக அளவில் குடித்து கொண்டிருந்த நபர் திடீரென 100 நாட்கள் குடிக்காமல் இருந்ததற்கு அவருக்கு அவரே பேனர் வைத்தது பூந்தமல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேனரை பார்த்ததும் அவரது நண்பர்கள் அவரது கடைக்கு வந்து அவரை வாழ்த்தி விட்டு செல்கின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Trending

To Top