Connect with us

Raj News Tamil

மணமகளுக்கு வந்த மெசேஜ்…மணமகன் தூக்கிட்டு தற்கொலை…என்ன நடந்தது?

தமிழகம்

மணமகளுக்கு வந்த மெசேஜ்…மணமகன் தூக்கிட்டு தற்கொலை…என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே விக்னேஷ் என்ற 27 வயது இளைஞர் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 20ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு வருகின்ற மே25ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் மணமகன் விக்னேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு வழக்கு பதிவு செய்த காவல்துறை தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் விக்னேஷ் எலக்ட்ரீசியன் வேலை பார்பதற்காக ஒரு வீட்டிற்கு சென்ற போது அந்த வீட்டின் உரிமையாளர் அஸ்மா என்ற திருநங்கைக்கும் விக்னேஷுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை மணப்பெண் பிரியதர்ஷினிக்கு அனுப்பி விக்னேஷ் தனது கணவர் என்றும், நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என மணப்பெண்ணிடம் மிரட்டியுள்ளார். இதையடுத்து ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருநங்கையின் தகாத உறவால் மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top