கிணற்றினுள் தவறி விழுந்த மூதாட்டி ! உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!

ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி பொது கிணறு ஒன்று உள்ளது .தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்துள்ளது . இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தாக தெரிகிறது. கிணற்றில் விழுந்த அவர் கயிறை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடினர்.

அப்போது கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பதறி போய் கிணற்றை பார்த்தபோது வள்ளியம்மாள் கூச்சல் போட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

RELATED ARTICLES

Recent News