தமிழகம்
குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், வசந்தம் நகர் பகுதியில் இன்று காலை குடிநீர் குழாயில் இருந்து வந்த தண்ணீர், கழிவு நீர் கலந்து கருமை நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் வந்ததால் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இப்பகுதியில் 7 முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் மாநகராட்சி சார்பாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஏழு நாட்களுக்கு பிறகு வந்த குடிநீரும் கழிவுநீர் கலந்து வந்ததால் விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள், அதை தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதிகளில் 2 மணி நேரம் மட்டும் தான் குடிநீர் விநியோகம் செய்யப்படும், அதில் கலப்படமாக வந்த தண்ணீர் 40 நிமிடத்திற்கு மேல் வந்தது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login