Connect with us

Raj News Tamil

திகார் சிறையில் இருந்தபடி சுயேட்சையாக போட்டியிட்டவர் வெற்றி!

தேர்தல் 2024

திகார் சிறையில் இருந்தபடி சுயேட்சையாக போட்டியிட்டவர் வெற்றி!

திகார் சிறையில் இருந்தபடி சுயேட்சையாக போட்டியிட்ட ஷேக் அப்துல் ரஷீத் வெற்றி பெற்றுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) கைதாகி 2019-ஆம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் எஞ்சினியர் ரஷீத், சுயேட்சையாக ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லாவை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், ரஷீத் வாக்குப்பதிவுக்கு இரு வாரங்களுக்கு முன்பாக தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார்.

சரியான வாக்குகள் எண்ணிக்கை மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகாத போதும், ரஷீத் எதிர் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில், “தவிர்க்க முடியாத ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற எஞ்சினியர் ரஷீத்துக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

More in தேர்தல் 2024

To Top