Connect with us

Raj News Tamil

போலீஸ் வாகனத்தை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்..!!

இந்தியா

போலீஸ் வாகனத்தை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்..!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் மூசா (19). இவர் திண்டிவனத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி பயின்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த தீபாவளி அன்று நாட்டு வெடிகுண்டு தயாரித்து அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் வாகனத்தை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசி அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்த சிலர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் கல்லூரி மாணவனை அழைத்து விசாரணை செய்ததில் ஊரில் பெரிய கெத்தாக வேண்டுமென இப்படிப்பட்ட செயலை ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து மூசா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக நாட்டு வெடிகுண்டை தயார் செய்து ரோந்து சென்ற போலீசார் வாகனம் அருகே வீசி அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More in இந்தியா

To Top