Connect with us

Raj News Tamil

ஓடுதளத்திற்குள் நுழைந்த நாயால் திருப்பிவிடப்பட்ட விமானம்..!

இந்தியா

ஓடுதளத்திற்குள் நுழைந்த நாயால் திருப்பிவிடப்பட்ட விமானம்..!

கடந்த திங்கள் கிழமையன்று மதியம் 12.55 மணியளவில் பெங்களூரிலிருந்து கோவாவிற்கு விமானம் ஒன்று கிளம்பியது. அப்போது கோவா விமானநிலையத்தின் ஓடுதளத்திற்குள் நாய் ஒன்று நுழைந்ததால் விமானத்தை தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

எனவே அந்த விமானத்தைத் தரையிறக்க சற்று நேரம் காத்திருக்கும் படி விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் விமானி, பாதுகாப்புக் கருதி மீண்டும் பெங்களூருவிற்கே விமானத்தை இயக்கினார்.

பின்னர் மீண்டும் மாலை 4.55 மணிக்கு பெங்களூருவிலிருந்து கிளம்பிய விமானம் 6.15 மணிக்கு கோவாவில் பாதுகாப்பாக தரையிறங்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெருநாயால் விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More in இந்தியா

To Top