தமிழகம்
விஷம் குடித்து காவல் நிலையத்திலேயே தற்கொலை செய்து கொண்ட காவலர்! பணிச்சுமை தான் காரணமா?
புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது42). இவர் திருக்கனூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றிவருகிறார்.சம்பவத்தன்று இவர் காவல்நிலையத்தில் பணியில் இருந்தபொழுது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற காவலர்கள் அரிகிருஷ்ணனை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது . பிறகு பரிசோதித்த மருத்துவர்கள் அரிகிருஷ்ணன் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து திருக்கனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையத்திலேயே காவலர் மயங்கி உயிரிழந்ததால் ,இச்சமபவமானது பொதுமக்களிடையேயும், காவலர்களிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.