Connect with us

Raj News Tamil

தாயை கொன்று சூட்கேசில் உடலை மறைத்த மகன்..!

இந்தியா

தாயை கொன்று சூட்கேசில் உடலை மறைத்த மகன்..!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹிமான்ஷு (20). இவரும், இவரது தாய் பிரதிமா தேவி(43), அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் வசித்து வந்தனர். கடந்த 13-ந்தேதி ஹிமான்ஷு, அவரது தாயிடம் ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.

அவரது தாய் பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் அவரை கொன்று அவரது சடலத்தை ஒரு சூட்கேசில் வைத்து ரெயிலில் திரிவேணி சங்கமம் நோக்கி சென்றுள்ளார். அங்கு தாயின் உடலை வீச முடிவு செய்து வந்துள்ளார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு ஹிமான்ஷு மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து சூட்கேசை திறந்து பார்த்ததில் ஒரு பெண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பணத்திற்காக மகனே பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top