கல்யாணம் செய்து வைக்காத தாய்…ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டத்தை அடுத்துள்ள பண்டா மைலாரம் கிராமத்தில் 45 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் மகனுக்கு தாய் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரத்தில் பெற்ற தாய் என்று கூட பாராமல் செங்கலால் துடிதுடிக்க அடித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தாயை மகனே அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரது மகன், கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News