Connect with us

Raj News Tamil

ஆசிரியர் கண்டித்ததால் 11வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை!

தமிழகம்

ஆசிரியர் கண்டித்ததால் 11வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை!

சென்னை, அசோக் நகர் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் ரகுராமன். இவரது மகன் கோகுல்ராம் (19) தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று நடைபெற்ற தேர்வில் இவர் அருகில் இருந்த மாணவரை பார்த்து தேர்வு எழுதியுள்ளார்.

இதனை கண்ட அறை கண்காணிப்பாளர் கோகுல்ராமை கண்டித்து அவரிடம் இருந்து விடைத்தாளை பெற்றுக்கொண்டு அவரை தேர்வு அறையை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். மேலும் பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கோகுல்ராம், கல்லூரியின் 11வது மாடியிலிருந்து குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top