இந்தியா
தனது கையை மற்றறொரு கையில் எடுத்து சென்ற வாலிபர்! இது தான் காரணமா ?
பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் வாலிபர் ஒருவர் தன்னுடைய ஒரு கை துண்டான நிலையில், அந்த கையை மற்றொரு கையால் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.ஒரு சிலர் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த சுமன்குமார் என்று தெரியவந்தது. அவர் ரயிலில் பயணித்த போது கீழே விழுந்ததில் ஒரு கை துண்டானதாகவும், அதனை இணைப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு
சென்றதாகவும் தெரிவித்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.