Connect with us

Raj News Tamil

இன்று முதல் 3 நாட்களுக்கு வெயில் பயங்கரமா இருக்கும்…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம்

இன்று முதல் 3 நாட்களுக்கு வெயில் பயங்கரமா இருக்கும்…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது. குறிப்பாக சென்னையில் நேற்று நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதியில் 105 புள்ளி 44 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு வெப்பம் கொளுத்தும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top